திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4¼ கோடி

41 ஆயிரத்து 891 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்துக்கு மக்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 90 ஆயிரத்து 87 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 41 ஆயிரத்து 891 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 30 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





