செவி குறைபாடு நீக்கும் ‘செவிசாய்த்த விநாயகர்’


செவி குறைபாடு நீக்கும் ‘செவிசாய்த்த விநாயகர்’
x

விநாயகர் தனது காதுகளைச் சாய்த்து சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களை கேட்கும் திருக்கோலத்தை சத்தியவாகீஸ்வரர் கோவிலில் காணலாம்.

திருச்சி அருகே கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோவில். இக்கோவிலின் மிக முக்கியமான அம்சம் 'செவிசாய்த்த விநாயகர்'.

திருஞானசம்பந்தர் பெருமான் கொள்ளிடத்தின் அக்கரையிலிருந்து இத்தலத்து இறைவனைப் பாடினார். அப்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவரால் கோவிலுக்கு வர முடியவில்லை. தூரத்திலிருந்தே சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களை, சிவபெருமானின் மூத்த பிள்ளையான விநாயகர், தனது யானைக் காதுகளைச் சாய்த்து, ஒரு காலை மடக்கி அமர்ந்து மிக ஆர்வமாகக் கேட்டாராம். அவர் காதுகளைச் சாய்த்து பாட்டைக் கேட்கும் அழகிய கோலத்தை, சத்தியவாகீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையில் காணலாம்.

வழிபாட்டு பலன்கள்:

செவி குறைபாடு நீங்க: செவி காது கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள் அல்லது காது தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்கள், இங்குள்ள செவிசாய்த்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

வாக்கு பலிக்க: இறைவன் 'சத்தியவாகீஸ்வரர்' (உண்மையான வார்த்தைக்கு அதிபதி) என்பதால், பக்தர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் அவர்கள் சொல்லும் வாக்கு பலிக்கும், பொய் சொல்லும் சூழ்நிலை வராது என்பது நம்பிக்கை.

1 More update

Next Story