ரொனால்டோவை அவமதித்த தென் கொரியா வீரர் - போர்ச்சுகல் பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு


ரொனால்டோவை அவமதித்த தென் கொரியா வீரர் -  போர்ச்சுகல் பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 3 Dec 2022 9:07 AM GMT (Updated: 3 Dec 2022 9:10 AM GMT)

போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது


கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் ரவுண்ட் ஆன் 16 எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போர்ச்சுக்கல் அணி ரவுண்ட் ஆன் 16-க்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் நேற்று தென் கொரிய அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது. எனினும் தரவரிசையில் போர்ச்சுக்கல் முதலிடத்தையும், தென்கொரிய அடுத்த இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த போட்டியின்போது போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டஸ் புகார் அளித்துள்ளார்.

ரொனால்டோவை பார்த்து தென் கொரியா வீரர் 'சீக்கிரம் போ' என கத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரொனால்டோ கோபத்துடன் காணப்பட்டார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரொனால்டோ "நான் அவரை அமைதியாக இருக்க சொன்னேன். எனக்கு கட்டளையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை' என கூறியுள்ளார்.


Next Story