சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
மும்பை,
வாரத்தின் முதல் நாளான இன்று (22.09.2025 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 124 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 202 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 174 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 284 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், பின் நிப்டி மாற்றமின்றி 26 ஆயிரத்து 528 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 466 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 159 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
145 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 94 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 171 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 195 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
Related Tags :
Next Story






