சரிவுடன் நிறைவடைந்த நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

நிப்டி 24 ஆயிரத்து 750 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
மும்பை,
சர்வதேச சூழ்நிலை உள்பட பல்வேறு காரணிகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் இன்று நிப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 82 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 750 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 203 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 749 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
20 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின் நிப்டி 26 ஆயிரத்து 499 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 182 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 451 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
6 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 712 புள்ளிகள் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 135 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 154 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Related Tags :
Next Story






