அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை,
வாரத்தின் முதல் நாளான இன்று (01.09.2025 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, 198 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 625 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 346 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 2 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 135 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின்நிப்டி 25 ஆயிரத்து 703 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 554 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 364 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
265 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 715 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 408 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 433 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






