ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை,
வாரத்தின் இறுதி நாளான இன்று (12.09.2025 - வெள்ளி) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 108 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 114 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 139 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 809 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 192 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 371 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 355 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 904 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
40 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 78 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 230 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 445 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






