ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிங்க

பி.இ.,பி.டெக், எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை,
சென்னை ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 20 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள்: ஜூனியர் இன்ஜினியர் (ஒருங்கிணைந்த மெட்டீரியல் மேலாண்மை) பிரிவில் மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ.,பி.டெக், எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: 11.10.2025ன் படி 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி காலம்: ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai - 600 054.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 11.10.2025
கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள: ddpdoo.gov.in






