மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான தேர்வு முடிவு வெளியீடு


மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான தேர்வு முடிவு வெளியீடு
x

உதவி தொகை பெறுவதற்கு தகுதிபெற்ற 6,695 மாணவர்களின் விவரப் பட்டியல் வெளியாகி உள்ளது.

சென்னை,

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை தேர்வு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை நேற்று வெளியிட்டுள்ளது.

மாணவர்கள், பெற்றோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், உதவி தொகை பெறுவதற்கு தகுதிபெற்ற 6,695 மாணவர்களின் விவரப் பட்டியலும் அதே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story