டியூசன் சென்ற சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா மாவட்டம் டம் டம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுமி கடந்த சனிக்கிழமை மாலை வீட்டிற்கு அருகே டியூசன் படிக்க சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின் தொடர்ந்து ஆட்டோவில் வந்த கும்பல் சிறுமியை கடத்திச்சென்றது. ஆட்நடமாட்டமற்ற பகுதிக்கு சிறுமியை கொண்டு சென்ற அந்த கும்பல் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.
இதையடுத்து, அந்த கும்பலிடமிருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சஞ்சு, விக்கி, ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






