சத்தீஷ்கார்: சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

சத்தீஷ்காரில் சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிலஸ்பூர் மாவட்டத்தில் இருந்து கட்னி நகருக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு இன்று காலை சரக்கு ரெயில் சென்றுகொண்டிருந்தது.
காலை 11.11 மணியளவில் ஹங்சரா - பன்வட்ரங்க் இடையே சென்றுகொண்டிருந்தபோது திடீரென சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தால் பிலஸ்பூர், கட்னி இடையேயான பயணிகள் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





