அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை


அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை
x

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்றுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக வந்து, உயிரிழந்த 7 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிதி நெருக்கடி காரணமாக அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story