சூரியகாந்தை சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரைத்த பி.ஆர்.கவாய்

பி.ஆர்.கவாய் அடுத்த மாதம் 23ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
சூரியகாந்தை சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரைத்த பி.ஆர்.கவாய்
Published on

டெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் செயல்பட்டு வருகிறார். இவர் அடுத்த மாதம் 23ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணியை மத்திய சட்ட அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமிக்க சட்ட அமைச்சகத்திற்கு தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்துள்ளார்.

தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக உள்ள சூரியகாந்த் சுப்ரீம் கோட்டின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 2026 ஆண்டு பிப்ரவரி 9ம் தேதிவரை தலைமை நீதிபதியாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com