டெல்லி கார் வெடிப்பு: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்
டெல்லி,
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் மாலை கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த கார்களும் வெடித்து சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் , 24 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று டெல்லி முதல்- மந்திரி ரேகா குப்தா தெரிவித்துள்ளார். நிரந்தர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல் - மந்திரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






