டெல்லியில் 24 -ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு: அமித்ஷா தொடங்கி வைக்கிறார்

சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா பங்கேற்பதாக டெல்லி சபாநாயகர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 24 -ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு: அமித்ஷா தொடங்கி வைக்கிறார்
Published on

புதுடெல்லி,

வருகிற 24 ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவையில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைப்பார் என்று டெல்லி சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

32 சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள், மேலவை, கீழவை தலைவர்கள், துணைத்தலைவர்கள் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர்.இந்தியாவில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறை. வருகிற 24-ம் தேதி தொடக்க அமர்வு நடைபெறும். இந்த மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.நிறைவு விழா 25-ம் தேதி நடைபெறும். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தமாநாட்டில் டெல்லி எம்.பி.க்கள், முதல்-மந்திரி ரேகா குப்தா, கேபினட் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com