'பரதனை போல ஆட்சி செய்வேன்' - டெல்லி முதல் மந்திரி அதிஷி உருக்கம்


பரதனை போல ஆட்சி செய்வேன் - டெல்லி முதல் மந்திரி அதிஷி உருக்கம்
x
தினத்தந்தி 23 Sept 2024 3:26 PM IST (Updated: 23 Sept 2024 3:40 PM IST)
t-max-icont-min-icon

ராமரின் செருப்பை வைத்து பரதன் அயோத்தியை ஆட்சி செய்தது போல 4 மாதங்கள் டெல்லியை ஆட்சி செய்வேன் என அதிஷி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து டெல்லியின் புதிய முதல் மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று முதல்-மந்திரியாக அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், முதல் மந்திரி பதவி குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"இன்று நான் டெல்லி முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளேன். தனது சகோதரர் ராமர் வனவாசத்திற்கு சென்றபோது எந்த வலியுடன் பரதன் அயோத்தியை ஆட்சி செய்தானோ, அதே வலியுடன் டெல்லியின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளேன். ராமரின் செருப்பை வைத்து எப்படி பரதன் 14 ஆண்டுகள் அயோத்தியை ஆட்சி செய்தானோ, அதேபோல டெல்லியில் 4 மாதங்கள் ஆட்சி செய்வேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story