ஆந்திரா: மின் கசிவால் தீ விபத்து - 40 வீடுகள் எரிந்து நாசம்

தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அமராவதி,
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் சர்லங்கா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100க்கும் குடிசை வீடுகள் உள்ளன.
இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள குடிசை வீட்டில் நேற்று இரவு மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் உள்ள குடிசை வீடுகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 40 வீடுகள் எரிந்து நாசமாகின.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், பற்றி எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் போன்ற பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





