துணை ஜனாதிபதி தேர்தல்: என்.டி.ஏ கூட்டணியில் வேட்பாளரை தேர்வு செய்ய மோடி, நட்டாவுக்கு அதிகாரம்


துணை ஜனாதிபதி தேர்தல்: என்.டி.ஏ கூட்டணியில் வேட்பாளரை தேர்வு செய்ய மோடி, நட்டாவுக்கு அதிகாரம்
x

துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணியும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை எம்.பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இதனால், தற்போது மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், இன்று பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி,மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங், சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சியின் லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு மற்றும் எல்.ஜே.பி (ராம் விலாஸ்) இன் சிராக் பாஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்,ஆளும் கூட்டணிக்கான துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி ஜேபி.நட்டா ஆகியோருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரம் அளிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணியும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 More update

Next Story