அடுத்த வாரம் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி


அடுத்த வாரம் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி
x

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி முதல் முறையாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி அடுத்த வாரம் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் முதலாவதாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று டிசம்பர் 15-ந்தேதி பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார். இந்த பயணத்தின்போது ஜோர்டான் மன்னருடன் இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தொடர்ந்து 16-ந்தேதி பிரதமர் மோடி எத்தியோப்பியா செல்கிறார். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலியை சந்தித்து பிரதமர் மோடி இந்தியா-எத்தியோப்பியா இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதன் பின்னர் 17-ந்தேதி சுற்றுப்பயணத்தின் கடைசி பகுதியில் ஓமன் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். அந்நாட்டிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் 2-வது சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது இந்தியா-ஓமன் இடையிலான வர்த்தகம், முதலீடுகள், இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story