ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் வெளிநாடுகள் பயணம்


ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் வெளிநாடுகள் பயணம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 Nov 2025 8:16 AM IST (Updated: 7 Nov 2025 8:17 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

புதுடெல்லி,

ஆப்பிரிக்க கண்டத்துடனான இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை (சனிக்கிழமை) தொடங்கி 6 நாட்கள் அவர் அங்கோலா மற்றும் போட்ஸ்வானா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இந்த நாடுகளுக்கு இந்திய தலைவர் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.

8-ந் தேதி அங்கோலா செல்லும் அவர், 13-ந் தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றவும், அங்கு வசிக்கும் இந்திய சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

பின்னர் அங்கிருந்து போட்ஸ்வானா செல்லும் திரவுபதி முர்மு, 13-ந் தேதி வரை அங்கு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அங்கு “இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கிறார்கள்.

1 More update

Next Story