விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

கோப்புப்படம்
விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தெலுங்கானாவில் விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள அரசு சமூக நல குருகுல பட்டப்படிப்பு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தவர் லட்சுமி பிரசன்னா. இவர் கல்லூரி விடுதி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த லட்சுமி பிரசன்னா உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






