பழி வாங்க... மனநலம் பாதித்த சிறுவனை, அவனுடைய சகோதரியுடன் பாலியல் உறவில் ஈடுபட செய்து வீடியோ எடுத்த பெண்

பாலியல் உறவில் ஈடுபட்ட வீடியோவை அந்த 40 வயது பெண் சமூக ஊடகத்திலும் பரவ விட்டு உள்ளார்.
புனே,
மராட்டியத்தின் நவி மும்பை நகரில் கன்சோலி கிராமத்தில் வசித்து வரும் 40 வயது பெண் ஒருவர் அதிர்ச்சி தரும் செயலில் ஈடுபட்டு உள்ளார். இவருக்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் இடையே நீண்ட கால தகராறு இருந்து வந்துள்ளது. சிறு சிறு விசயங்களுக்கு கூட இருவரும் மோதி கொண்டனர்.
இந்த பகை அப்படியே வளர்ந்து நாளடைவில் பழி வாங்கும் அளவுக்கு சென்றது. பக்கத்து வீட்டு பெண்ணுக்கு 10 வயதில் மனநலம் பாதித்த மகன் ஒருவர் இருக்கிறார். 6 வயதில் மகளும் இருக்கிறார்.
இந்நிலையில், பக்கத்து வீட்டு பெண்ணை பழி வாங்கும் வகையில், அவருடைய மனநலம் பாதித்த மகனை அழைத்து, அவனுடைய இளைய சகோதரியிடம் பாலியல் உறவில் ஈடுபடும்படி இந்த பெண் கூறியுள்ளார். இதனை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார்.
இதன்பின்னர், அந்த வீடியோவை சமூக ஊடகத்திலும் பரவ விட்டு உள்ளார். இதுபற்றி அறிந்த அந்த பக்கத்து வீட்டு பெண், அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணிடம் நியாயம் கேட்டுள்ளார். தொடர்ந்து ரபாலே காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
இதுபற்றி போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மற்றும் புதிய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. ஐ.டி. சட்டத்தின் கீழும் வழக்கு பதிவாகி உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
மராட்டியத்தில், பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில், அவருடைய மனநலம் பாதித்த மகனை கொண்டு, அவனுடைய இளைய சகோதரியுடன் பாலியல் உறவில் ஈடுபட வைக்க, அந்த பெண் செய்த சதி திட்டம் மற்றும் அதுபற்றிய வீடியோவை வைரலாக்கியது ஆகியவை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






