இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025


இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025
x
தினத்தந்தி 4 Feb 2025 9:08 AM IST (Updated: 5 Feb 2025 9:04 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 4 Feb 2025 7:18 PM IST

    கேரளா : திருச்சூர் அருகே கோயில் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மிரண்டு ஓடிய யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • 4 Feb 2025 6:37 PM IST

    புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழாய்வில், நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி' கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

  • 4 Feb 2025 6:35 PM IST

    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். 

  • 4 Feb 2025 6:28 PM IST

    வனத்துறையில் காலியாக உள்ள 72 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 34 வரைவாளர், 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

  • 4 Feb 2025 5:16 PM IST

    சாமானிய, நடுத்தர மக்களை முன்னேற்றிக்கொண்டு வந்துள்ளது பாஜக அரசு என்று மக்களவையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  • 4 Feb 2025 4:57 PM IST

    மராட்டியத்தில் அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில்தான் உரையாடல்கள் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர்களுடன் மட்டும் பொதுவான தொடர்பு மொழியில் பேசிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 4 Feb 2025 4:53 PM IST

    40 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையின் அடையாளமாக திகழ்ந்த உதயம் தியேட்டரை ஜேசிபி இயந்திர உதவியுடன் இடிக்கும் பணி தொடங்கியது.

  • 4 Feb 2025 4:40 PM IST

    ‘கலைஞர் கருவூலம்’ என்ற சிறப்பு இணையதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். www.tamildigitallibrary.in/kalaignar கலைஞரின் இலக்கியம், இதழியல், உரைகள், திரைப்படங்கள், காலப்பேழை என்ற பிரிவுகளில் அனைத்து படைப்புகளும் PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளன.

  • 4 Feb 2025 4:13 PM IST

    திருப்பூரில் கெமிக்கல் குடோனில் பயங்கர தீ விபத்து

    திருப்பூர் பழவஞ்சிபாளையத்தில் உள்ள கெமிக்கல் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீப்பற்றிய குடோனில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  

  • 4 Feb 2025 3:35 PM IST

    அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம்: பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதனை திரும்ப ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story