மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது
x

திருபுவனை அருகே சொகுசு வாழ்க்கை அனுபவிக்க மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

திருபுவனை

சொகுசு வாழ்க்கை அனுபவிக்க மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் மதகடிப்பட்டு எல்லைப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயதுடைய 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனைசெய்தபோது, அது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

2 சிறுவர்கள் கைது

விசாரணையில் ஒருவன் மெக்கானிக்காகவும், மற்றொருவன் ஜூஸ் கடையிலும் வேலை பார்த்து வந்ததும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக மோட்டார் சைக்கிள்களை திருடி அதனை குறைந்த விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருபுவனை, மடுகரை, வளவனூர் பகுதிகளில் திருடிய 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.


Next Story