கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

காரைக்காலில் கஞ்சா விற்ற 2 வாலிபரைகளை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ராயன்பாளையம் பகுதிகளில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 2 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் 2 பேரும் ராயன்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த சதீஷ் (வயது 22), அரவிந்த் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிராம் எடை கொண்ட 7 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





