கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x

காரைக்கால் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பதாக காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற 2 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், காரைக்கால் தலத்தெரு சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 22), சொக்கநாதர் கோவில் தெருவைச் சேர்ந்த ரகுராம் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 36 கஞ்சா பொட்டலங்களையும், 2 செல்போன் களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story