கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் போலீசார் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. அருகே 2 பேர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்துசென்று அங்கிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சண்முகாபுரத்தை சேர்ந்த ஜெயசூர்யா (வயது22), ஹரிஷ்குமார் (20) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 235 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





