செல்போன் கடைக்காரர் திடீர் சாவு


செல்போன் கடைக்காரர் திடீர் சாவு
x

புதுவை உருளையன்பேட்டை அருகே செல்போன் கடைக்காரர் திடீரென இறந்ததால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

உருளையன்பேட்டை தென்னஞ்சாலையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி இருசம்மாள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இன்று வீட்டில் ரமேஷ் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசின் திடீர் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story