அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் சாவு


அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் சாவு
x

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் 4-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது44). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானார். இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு 2 நாட்களுக்கு ஒருமுறை வந்து செல்வாராம்.

இந்த நிலையில் தட்சணாமூர்த்தி புதிய பஸ் நிலையம் அருகே அம்மன் கோவில் வீதியில் இறந்து கிடந்தார். உருளையன்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தட்சணாமூர்த்தி அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story