மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

புதுவையில் சென்டர் மீடியனில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி

புதுவை காசிம் சாலையை சேர்ந்தவர் முகமது ஷரீப். அவரது மகன் முகமது ஷமீர் (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று நள்ளிரவில் சாப்பிடுவதற்காக தனது மோட்டார்சைக்கிளில் புதிய பஸ் நிலைய பகுதியில் சென்றார். அப்போது அவர் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் (சென்டர் மீடியன்) மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story