வைரஸ் காய்ச்சல்


வைரஸ் காய்ச்சல்
x
தினத்தந்தி 9 Oct 2022 5:30 PM GMT (Updated: 9 Oct 2022 6:17 PM GMT)

புதுச்சேரி

புதுவையில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் இன்று அரசு ஆஸ்பத்திரிகளில் 430 குழந்தைகள் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றனர். இதில் 27 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 19 பேர், ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 89 பேர், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் 22 பேர் என 130 குழந்தைகள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 347 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 11 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று 49 பேர் குணமடைந்தனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 5, வீடுகளில் 156 என 161 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 14 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 380 பேரும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 822 பேரும் செலுத்திக்கொண்டனர்.


Next Story