டெங்கு பாதிப்பு குறித்து வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்


டெங்கு பாதிப்பு குறித்து வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்
x

டெங்கு பாதிப்பு குறித்து வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரி

டெங்கு பாதிப்பு குறித்து வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டெங்கு காய்ச்சல்

புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதுவை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது புதுவையில் டெங்கு பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வீடு, வீடாக ஆய்வு

முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளிடம், டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கையை துரிதப்படுத்தவும், வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

மேலும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக டாக்டர்களை அணுக அறிவுறுத்தவும், கொசுவை ஒழிக்க மருந்து தெளிக்கவும், அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார். டெங்கு காய்ச்சல் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்புமாறும் அறிவுறுத்தினார்.


Next Story