சுருக்கெழுத்தர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சந்திப்பு

புதுவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்தர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி
புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 35 சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டு, கடந்த 10-ந்தேதி 31 பேரை கொண்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்து, பணியில் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





