வேளாண் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வேளாண் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

வேளாண் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 80-க்கும் மேற்பட்ட வேளாண் பட்டதாரி அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் வேளாண் துறையில் உள்ள துணை இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் வேளாண் இயக்குனர் ஆகிய பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக புதுச்சேரி வேளாண் பட்டதாரி அலுவலர்கள் நலச்சங்கத்தினர் முதல்-அமைச்சர், வேளாண் அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அலுவலகத்தில் புதுச்சேரி வேளாண் பட்டதாரி அலுவலர்கள் நலச்சங்கத்தினர் பதவி உயர்வு வழங்கக்கோரி பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கரதாஸ் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் சிவக்குமார், செயலாளர் வினோத் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் புதுவை, காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும் வருகின்ற திங்கட்கிழமை வேளாண் இயக்குனரகத்தில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும், 12-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.


Next Story