எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா


எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா
x

காரைக்காலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

காரைக்கால்

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி, புதுவை மாநில ஓவியர் மன்றம் இணைந்து, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓவியப் போட்டி ஆன்லைன் முறையில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், எய்ட்ஸ் நோயாளிகளிடம் அன்பு, ஆதரவு காட்டுவோம் என்ற தலைப்பில் ஓவியம் வரைந்து அனுப்பிவைத்தனர். போட்டியில் 138 பேர் பங்கேற்றனர். முடிவில், நடுவர் குழுவினரால் 20 ஓவியங்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் டாக்டர் சிவராஜ்குமார், முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகர், புதுவை மாநில ஓவியர் மன்ற தலைவர் இபேர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவில், பத்மஸ்ரீ விருது பெற்ற கேசவசாமி, காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் சோழசிங்கராயர், பள்ளி தலைமையாசிரியை மார்கிரெட் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story