அந்தோணியார் ஆலய தேர் பவனி

உருளையன்பேட்டையில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடந்தது.
புதுச்சேரி
புதுச்சேரி உருளையன்பேட்டையில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை 6.30 மணிக்கு பிரார்த்தனையும், மாலையில் நற்செய்தி, மறையுரையும் நடந்தது. முக்கிய விழாவான இன்று காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், பகல் 11 மணிக்கு ஜெபவழிபாடும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





