பெண் மீது தாக்குதல்

புறா திருடியதை கண்டித்த பெண்ணை தாக்கியவா் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
லாஸ்பேட்டை கல்லூரி சாலையை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 41). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கல்விக்கரசி (38). இவர் தனது வீட்டில் கீழ்தளத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். முதல் மாடியில் கூண்டு வைத்து புறாக்கள் வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது புறாக்கூண்டில் இருந்து புறா ஒன்றை பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ் என்பவர் திருடினார். இதனை பார்த்த கல்விக்கரசி அவரை அழைத்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கல்விக்கரசியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் கல்விக்கரசி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பிரகாசை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






