மனைவியை தாக்கி கொலை மிரட்டல்


மனைவியை தாக்கி கொலை மிரட்டல்
x

மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

மூலக்குளம்

புதுச்சேரி சண்முகாபுரம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). தொழிலாளி. அவரது மனைவி சத்யா (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் கடந்த 8 மாதங்களுக்கு முன் மனைவியை விட்டு முருகன் பிரிந்து சென்றார்.

இந்தநிலையில் நேற்று வீட்டுக்கு வந்த முருகன், சத்யாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதுடன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.


Next Story