அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு


அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு
x

முன்விரோதம் காரணமாக அண்ணன்-தம்பியை வெட்டிய தம்பதி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்கால்

முன்விரோதம் காரணமாக அண்ணன்-தம்பியை வெட்டிய தம்பதி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்விரோதம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சுரக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 29). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனுசாமி (45) என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு திருநள்ளாறு கருக்கன்குடி தனியார் பள்ளி அருகே மாரியப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முனுசாமி, மாரியப்பனிடம் தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது. இதைப் பார்த்த மாரியப்பனின் அண்ணன் லோகநாதன் (32) சண்டையை விலக்கி விட முயன்றார்.

அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரம் அடைந்த முனுசாமி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அண்ணன், தம்பி இருவரையும் வெட்டினார். மேலும் முனுசாமியின் மனைவி மலர்விழி (40) மற்றும் மகன்களும் சேர்ந்து அண்ணன், தம்பியை தாக்கியதாக தெரிகிறது.

தாக்குதலில் காயமடைந்த அண்ணன், தம்பி 2 பேரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமி உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story