பி.எஸ்.என்.எல் சிம் காா்டு விற்பனை முகாம்


பி.எஸ்.என்.எல் சிம் காா்டு விற்பனை முகாம்
x

புதுவையில் பி.எஸ்.என்.எல் சிம் காா்டு விற்பனை முகாம் நாளை முதல் தொடங்கி 3 நாட்கள் நடைபெறகிறது.

புதுச்சோி

புதுச்சேரி பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் சிம் கார்டு விற்பனை சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த முகாம் மேட்டுப்பாளையம், வில்லியனூர், ஏம்பலம் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரில், காலாப்பட்டு முருகன் கோவில் அருகில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இந்தியன் வங்கி அருகில், மடுகரை, அரும்பார்த்தபுரம், வில்லியனூர் பைபாஸ் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மற்றும் ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம், எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த சிறப்பு முகாமில் ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல். 4-ஜி சிம் கார்டு ரூ.50-க்கு வழங்கப்படுகிறது. முதல் 45 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். மேலும் தினசரி 2ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். இலவசம். இதர நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிற்கு இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் அதிவேக இண்டா்நெட் பாரத் பைபா் நுழைவு பிளான் ரூ.329-க்கு வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை புதுச்சேரி பி.எஸ்.என்.எல். முதன்மை பொதுமேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Next Story