சென்னை வாலிபர் கைது


சென்னை வாலிபர் கைது
x

புதுவையில் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவில் மறைமலை அடிகள் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த பிரசாத் (வயது 25) என்பதும், புதுவைக்கு சுற்றுலா வந்த அவர் மதுகுடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story