கல்லூரி மாணவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு


கல்லூரி மாணவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
x

இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வரவழைத்து கல்லூரி மாணவரை தாக்கி 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்

இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வரவழைத்து கல்லூரி மாணவரை தாக்கி 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்

கரியமாணிக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தை சேர்ந்தவர் 23 வயது கல்லூரி மாணவர். இவரது முகநூல் (பேஸ்புக்) பக்கத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், உல்லாசமாக இருக்க தன்னிடம் இளம் பெண்கள் இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் தகவல் அனுப்பவும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை பார்த்த மாணவர், பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க விரும்புவதாக பதில் அனுப்பினார். அன்று மாலையே பதிலுக்கு, வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே வருமாறு குறுந்தகவல் வந்தது.

அந்த இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் அவர் சென்றார். சற்று நேரத்தில் அங்கு வந்த 2 வாலிபர்கள், தங்கள் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வருமாறு அவரிடம் கூறினர். அதன்படி அவர், அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

பணம், செல்போன் பறிப்பு

ஒதியம்பட்டு சந்திப்பு அருகே வந்ததும், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கல்லூரி மாணவரை இருட்டான பகுதிக்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை முட்டி போடவைத்து 'உனக்கு இளம்பெண் கேட்குதாடா?' எனக்கூறி தாக்கினர். பின்னர் அவர் வைத்திருந்த 8,500 ரூபாய் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து வில்லியனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரி மாணவரை, பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வரவழைத்து, அவரை தாக்கி பணம் பறித்தது ஜி.என்.பாளையத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (22), சரவணன் என்கிற பாலா (23) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள், செல்போனை பறிமுதல் செய்தனர்.


Next Story