காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டம்


காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டம்
x

மின்துறை தனியார் மயத்தை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

வில்லியனூர்

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் வில்லியனூர் அருகே பத்துக்கண்னு சந்திப்பில் இன்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், மாநில செயலாளர் செந்தில் குமரன் தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் வில்லியனூர் மாட வீதியில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. மாநில பொருளாளர் சன்.குமரவேல், காங்கிரஸ் கட்சி சிறப்பு பிரதிநிதி ராஜ்குமார் மற்றும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story