அரசுப்பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணி
அரசுப்பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி
முதலியார்பேட்டை அன்னை சிவகாமி, கதிர்காமம், உழவர்கரை, தவளக்குப்பம், கூடப்பாக்கம், மாகி அரசுப்பள்ளிகளில் பாரத் பெட்ரோலியம் சார்பில், ரூ.46 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது. இந்த பணிகளின் தொடக்க நிகழ்ச்சி கதிர்காமம் அரசு பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.ரமேஷ், சம்பத், சிவசங்கர், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு, கதிர்காமம் பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள், கிராமாலயா நிர்வாக இயக்குனர் இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story