புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று
x

புதுவயைில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,559 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 16 பேர் புதுச்சேரியையும், 4 பேர் காரைக்காலையும், ஒருவர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். தற்போது ஆஸ்பத்திரிகளில் 3 பேரும், வீடுகளில் 111 பேரும் என 114 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 7 பேர் குணமடைந்தனர்.

முதல் தவணை தடுப்பூசியை 114 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 735 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 302 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 28 ஆயிரத்து 432 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story