புதிதாக 8 பேருக்கு கொரோனா


புதிதாக 8 பேருக்கு கொரோனா
x

புதுச்சேரியில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 378 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 9 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இன்று 13 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 2 பேர், வீடுகளில் 232 பேர் என மொத்தம் 234 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுவையில் தொற்று பரவல் 2.38 சதவீதமாகவும், குணமடைவது 98.68 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 10 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 48 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 26 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 39 ஆயிரத்து 766 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


Next Story