53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப முடிவு


53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப முடிவு
x

சீனியாரிட்டி அடிப்படையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, செப்.15-

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 53 பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வருகிற 22-ந் தேதி நடக்கிறது. தொடர்ந்து 24-ந் தேதி பரைட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை சீனியாரிட்டி அடிப்படையில் 29 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களும், 178 ஏட்டுகளும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தகவலை புதுச்சேரி காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் தெரிவித்துள்ளார்.


Next Story