வாய்க்கால் தூர்வாரும் பணி


வாய்க்கால் தூர்வாரும் பணி
x

அரியாங்குப்பத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் ரூ.3.68 லட்சத்தில் தூர்வாரி ஆழப்படுத்தவும், அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.2 லட்சத்தில் உறிஞ்சி குழியும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை பாஸ்கர் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story