ரூ.81 லட்சத்தில் தூர்வாரும் பணி

மங்கலம் தொகுதியில் ரூ.81 லட்சத்தில் தூர்வாரும் பணியை 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
மங்கலம்
வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் (100 நாள் வேலை திட்டம்) மங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தமங்கலம் குடுவையாற்றில் ரூ.17 லட்சத்து 14 ஆயிரம் செலவில் தூர்வாரப்படுகிறது. மேலும் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஓடை வாய்க்காலை ரூ.16 லட்சத்து 12 ஆயிரம் செலவில் தூர்வாருதல், சிவராந்தகம் கிராமத்தில் உள்ள ஏரியின் தெற்கு பகுதியை ரூ.48 லட்சம் செலவில் ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.
இந்த பணிகளை அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் தன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






