டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மகன் தனியாக விட்டு சென்றதால் மனமுடைந்து டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்

பாகூர் அடுத்த குடியிருப்பு பாளையம், வி.வி.நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). டிரைவர். இவரது மனைவி செல்வி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவர்களது மகன்கள் செல்வமணி, இளஞ்செழியன் ஆகியோர் திருமணம் ஆகி வேலை கிடைத்த ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இதனால், இளங்கோவன் மட்டும் தனியாக வசித்து வந்தார். பெற்ற மகன்கள் இருந்தும் அவர்களுடன் இருந்து பேரன், பேத்திகளை கொஞ்ச முடியவில்லையே என்ற தனிமை அவரை வாட்டியது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் மின் விசிறி கொக்கியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story